×

திருமயம் அருகே 106 ஜெலட்டின் குச்சிகளுடன் வாலிபர் கைது

 

திருமயம்,ஜூன் 12: புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே உள்ள லெம்பலக்குடி கிராமத்தை சேர்ந்தவர் மோகன் மகன் சிலம்பரசன்(36). இவர் அப்பகுதியில் உள்ள கல்குவாரி ஒன்றில் பணி செய்து வருகிறார். இதனிடையே சிலம்பரசன் பணி செய்யும் கல்குவாரியில் பாறாங்கற்கள் உடைப்பதற்கு ஜெலட்டின் குச்சிகளை பாதுகாப்பாற்ற முறையில் அனுமதியின்றி வைத்திருந்ததாக கூறப்படுகிறது. இது சம்பந்தமாக லெம்பலக்குடி விஏஓ பெருமாள் கொடுத்த புகாரின் அடிப்படையில் நமணசமுத்திரம் போலீசார் சிலம்பரசன் மீது வழக்குப்பதிந்து கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து 106 ஜெலட்டின் குச்சிகளை பறிமுதல் செய்து மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post திருமயம் அருகே 106 ஜெலட்டின் குச்சிகளுடன் வாலிபர் கைது appeared first on Dinakaran.

Tags : Thirumayam ,Mohan Makan Silambarasan ,Lempalakudi village ,Pudukottai district ,
× RELATED டோல்பூத் கட்டணத்தை தவிர்க்க...